Wednesday, June 6, 2007

ஆஹா!! கடா வெட்டுறாய்ங்கடோய்...

http://www.youtube.com/watch?v=9GpPcMVbmtw


இதை ஏற்பாடு செய்த "HR Manager" இறந்து ( ஒரு பேச்சுக்குத்தான்) மேலுலகம் சென்றாராம்.
"தங்கள் வரவு நல்வரவாகுக" என்று வரவேற்ற சித்திரகுப்தன், " பாருங்கள் இதுவரை இங்கே மனித வள மேளாளர் எவரும் வந்ததில்லை. அதனால் உங்களை எங்கே அனுப்புவது என்று தெரியவில்லை" என்றார்.
மனித வள மேளாளரோ " என்னை சொர்க்கத்ற்குள் விடுங்கள். நான் அங்கேயே காலத்தை கழிக்க விரும்புகிறேன்" என்றார்.
" இல்லை !! எருமை பார்ட்டியிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருக்கவேண்டும். அதன் பின், மீதி நாட்களை எங்கே கழிக்கவேண்டுமென்று உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் " என்றார்.
ஆனால் மனித வள மேளாளரோ " எனக்கு நரகம் போக விருப்பமில்லை, நான் சொர்க்கத்திலேயே இருக்கிறேன்" என்றார்.
" மன்னிக்கவும்!! சட்டம் என்றால் சட்டம்தான். உங்க ஊர் ஹெல்மட் சட்டம் அல்ல. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருக்கவே இருக்கவேண்டும் " என்று கூறி மனித வள மேளாளரை மின் தூக்கி உள்ளே அனுப்பினார்.
மின் தூக்கி கீழே கீழே கிழே நரகத்திற்குச் சென்றது.
மின் தூக்கி கதவு திறக்கப்பட்டது. அங்கே அவர் கண்டது கண்கொள்ளா காட்சி. எங்கு பார்த்தாலும் பசுமை, அழகான பூங்கா, தூரத்தில் அவர் அடிக்கடி செல்லும் மனமகிழ் மன்றம். வெளியே அவருடன் வேலை பார்க்கும் நண்பர்கள் கையில் மாலையுடன் வரவேற்கிறார்கள். படத்தில் உள்ளது போல் எல்லோரும் கை கொடுத்து கை தட்டி உற்சாகபடுத்துகிறார்கள். யானையும் வந்து அவருக்கு மாலை போட்டது. அதன் பிறகு ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். நண்பர்களுடன் பழைய கதைகள் பேசி பேசி பொழுது போனதே தெரியவில்லை.
மனித வள மேளாளருக்கு பிடித்த "வயதான பிச்சு (old monk)" ரம் & வறுத்த கோழியுடன் இரவில் மிக அருமையான விருந்து. விருந்தில் சாத்தானை சந்தித்தார். சாத்தான் மிக அழகாக இருந்தார் அடிக்கடி "A' ரக ஜோக் சொல்லி குஷிபடுத்தினார். சாத்தானுடன் நடனமாடினார்.
" ஆகா! இவ்வளவு இன்பமானதா நரகம் " என்று நினைக்கும்போதே அவர் விடைபெறும் வேளை வந்தது. அவர் நண்பர்களும் சாத்தானும் கை குலுக்கி மின் தூக்கி வரை வந்து வழி அனுப்பினார்கள்.
மின் தூக்கி மேலே மேலே சென்றது. சித்திரகுப்தன் கதவை திறந்து " அடுத்த ஒரு நாள் சொர்க்கத்தில்" என்று கூறி அவரை சொர்க்கத்திற்கு அனுப்பினார்.
ஒரு நாள் முழுவதும் தேவதைகளுடன் மேக கூட்டதிற்குள் உய்யலாலா பாடி திரிந்தார். ரம்பை, ஊர்வசி, மேனகா நடனங்களை கண்டு ரசித்தார். ஒரு நாள் முடிந்தது. சித்ரகுப்தன் மீண்டும் வந்தார்.
"சரி. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருந்தீர்கள். இப்பொழுது மீதி நாட்களை எங்கே கழிக்கவேண்டுமென்று உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் " என்றார்.
மனித வள மேளாளர் சிறிது நேரம் யோசித்து " நல்லது. நான் இதை சொல்வேன் என்று நானே எதிர் பார்க்கவில்லை. சொர்க்கம் நன்றாகத்தான் இருந்தது ஆனால் அதைவிட நரகத்தில்தான் நன்றாக பொழுது போனது"
உடனே சித்ரகுப்தன் அவரை மின் தூக்கிக்கு அழைத்துச் சென்று நரகத்திற்கு வழிஅனுப்பிவைத்தார்.
மின் தூக்கி கீழே கீழே கிழே நரகத்திற்குச் சென்றது.
மின் தூக்கி கதவு திறக்கப்பட்டது. நரகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் மேளாளர் . கண்ணுக்கு எட்டியவரை எங்கு பார்த்தாலும் பாலை நிலம். ஒரு மரம் கூட தென்படவில்லை. எங்கு பார்த்தாலும் மனித மலம். ஒரே துற்நாற்றம்.
மேளாளரின் நண்பர்கள் கிழிந்த உடையுடன் குப்பை அள்ளிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் இரண்டு தடியர்கள் எண்ணெய் சட்டிக்கு தீ மூட்டிக் கொண்டிருந்தார்கள்.
மேளாளர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அப்பொழுது சாத்தான் அவர் அருகில் வந்து தோளில் கை போட்டு புன்னகை செய்தார்.
மேளாளர் நடுக்கமுடன் " எனக்கு ஒன்றும் புரியவில்லை, நேற்று நான் இங்கு இருந்தேன். நண்பர்களுடன் ஆடினேன் பாடினேன், ஆனால் இப்போ .... " வார்த்தை வராமல் தடுமாறினார்.

சாத்தான் மேளாளரைப் பார்த்து புன்னகைத்து

"Yesterday we were recruiting you, today you're an Employee"

0 comments: